Sunday 19th of May 2024 01:34:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவுச் செயற்பாட்டாளர் ரிஐடியினரால் விசாரணைக்கு அழைப்பு!

தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவுச் செயற்பாட்டாளர் ரிஐடியினரால் விசாரணைக்கு அழைப்பு!


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமாகிய பீற்றர் இளஞ்செழியனை கிளிநொச்சி தீவிரவாததடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (04.08.2021) முல்லைத்தீவு – மணற்குடியிருப்பில் அமைந்திருக்கின்ற அவருடைய வீட்டிற்கு சென்ற சிவில் உடையில் வருகை தந்த போலீசார் என தன்னை குறிப்பிட்டு கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வு பிரிவிற்கு செல்லுமாறு குறித்த கடிதத்தை கையளித்து சென்றுள்ளனர்.

குறித்த கடிதத்தில் பீற்றர் இளஞ்செழியனை 06.08.2021 அன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி தீவிரவாத ஒடுக்குமுறை மற்றும் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் வாக்குமூலம் ஒன்றினை பெறுவதுக்காக வருகை தருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE